இவ்வுலகில் அல்லாஹ்வின் அருட்கொடைகள் முடிவில்லாமல் ஒவ்வொரு வினாடியும் இறங்கிக் கொண்டே இருக்கிறது .. அதை அனு தினமும் பாராமல் , விளங்காமல் அப்படியே நாம் விட்டு விடுகிறோம் .எப்படி மழை ப்பொழியும் போது நாம் சும்மா நிற்கிரோமோ அது மாதிரியே இருந்து விட்டு பிறகு யார் யாருக்கோ அவன் கொடுக்கிறான் . அது அவனின் தலையெழுத்து “ நஸிப் “ என்று எளிமையாக விட்டு விலகி விடுகிறோம். .
எப்படி நம் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருள் கையால் எடுக்காத வரை நம் வாய்க்கு போகாதோ அதே மாதிரி ,குறைஞ்ச பட்சம் யாராவது அதை எடுத்து நமக்கு ஊட்டாத வரை நமக்கு கிடைக்காது. இது அந்த மனிதனின் தவரே.தவிர படைத்தவனின் தவறல்ல .
இறைவனின் அருள் மழை இவ்வுலகின் மீது இடைவிடாது பொழிந்துக்கொண்டு இருக்கும் போது அதனை யார் யார் எவ்வளவு பெரும் பாத்திரத்தை க்கொண்டு ஏந்துகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். சிறிய அளவு பாத்திரத்தை ஏந்து பவர்கள் சிறிய அளவையும் , பெரிய பாத்திரத்தை கொண்டு ஏந்துபவர்கள் பெரிய அளவையும் பெற்றுக்கொள்வார்கள் ..சிறிய அளவு பாத்திரத்தை கொண்டு ஒருபோதும் அதனை பெரும் அளவில் பெற்றுக்கொள்ளவே முடியாது.
அந்த பாத்திரம் எது என்பதை நமது ரஸுல் (ஸல் ) அவர்கள் தெளிவாகவே நிறைய விளக்கங்களுடன் அருமையாக சொல்லியி ருக்கிறார்கள் அதுதான் பிராத்தனை ’’துவா’’ படைப்பினர் அனைவரும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள்தான் ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அடியார்களின் பால் முற்றும் முழுதாக தேவையற்றவன் .
அல்லாஹ்தாலா அவனது அடியார்கள் அவனிடம் பிராத்தனை புரிவதை கட்டாயமாக்கினான். குர் ஆனில் சொல்லும் போது ‘’நீங்கள் என்னை அழைத்து பிராத்தனை புரியுங்கள். நான் நிச்சயமாக உங்களு (டைய பிராத்தனை) க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக ( என்னிடம் பிராத்தனை புரிந்து ) என்னை வனங்குவதை விட்டும் பெருமை அடிப்பவர்கள் இழிவடைந்த நிலையில் நரகம் புகுவார்கள்” .
அது மட்டுமல்ல , அல்லாஹ் தன் அடியார்கள் அவனிடம் தமது தேவைகளை கேட்பதால் மகிழ்ச்சி அடைகிறான் . ஒரு தேவைக்காக திருப்பி திருப்பி துவா கேட்பவர்களை அவன் விரும்புவதுடன் அவர்களை தன்னிடம் நெருக்கமாக்கி கொள்கிறான் . இதையே ரஸுலுல்லா (ஸல் ) அவர்கள் மிக எளிமையாக சொன்னது ‘’உனது செருப்பின் வார் அறுந்து விட்டாலும் கூட தேவைக்காக அவனிடமே கேள் ’’ .பிறகும் நாம அவனிடம் கேட்க வெட்கப்படுகிறோம்..கூச்சப்படுகிறோம்.
எத்தனை முறை ஓதினாலும் மனதுக்கு சந்தோஷம் கொடுக்கும் சுவர்கத்தின் ஆடம்பரத்தையும் , அதில மனித ஜின் இனத்தவர்களுக்கும் உள்ள சிறப்பை சொல்லும் சூரா வாகிய அர்ரஹ்மானில் ஆரம்பமே இப்படித்தான் ஆரம்பிக்கிறான்.
அர்ரஹ்மான் ( அல் குர் ஆன் 55: 1 ) (அவனே ) அளவற்ற அருளாளன் .சூரா ஃபாத்திஹாவின் இரண்டாவதாக வருவதும் அர்ரஹ்மான் நிர் ரஹிம். அவனிடமிருந்து கடைசியாக வந்த ஆயத்திலும் ‘’ இன்றைய தினம் என் அருட் கொடையை உங்கள் மீது பூர்த்தியாக்கினேன்.
(( யா.!! அல்லாஹ் ..!! உன்னுடைய அருட்கொடையை இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக..!! வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரனிக்க செய்வாயாக ..!! ஆமீன் ..ஆமீன்..யாரப்பில் ஆலமீன்
ஸாதிகா Says:
//(( யா.!! அல்லாஹ் ..!! உன்னுடைய அருட்கொடையை இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக..!! வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரனிக்க செய்வாயாக ..!! ஆமீன் ..ஆமீன்..யாரப்பில் ஆலமீன்
// ஆமீன்////////!
Posted on October 17, 2010 at 10:10 AM
அன்புடன் மலிக்கா Says:
யா.!! அல்லாஹ் ..!! உன்னுடைய அருட்கொடையை இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக..!! வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரணிக்க செய்வாயாக ..!! ஆமீன் ..ஆமீன்..யாரப்பில் ஆலமீன் .//
மிக அருமையான விளக்கம் அண்ணாத்தே. தொடர்ந்து தொடருங்கள் இறைவனின் துணையுடன்..
Posted on October 18, 2010 at 3:36 PM
எம் அப்துல் காதர் Says:
//எப்படி நம் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருள் கையால் எடுக்காத வரை நம் வாய்க்கு போகாதோ அதே மாதிரி, குறைஞ்ச பட்சம் யாராவது அதை எடுத்து நமக்கு ஊட்டாத வரை நமக்கு கிடைக்காது. இது அந்த மனிதனின் தவரே.தவிர படைத்தவனின் தவறல்ல. //
///உண்மை/உண்மை/உண்மை///
Posted on November 4, 2010 at 1:31 AM