அந்தப் பறவை...!!!


அந்தப் பறவை
 அந்தப் பறவை.. அந்தக் குகைக்குள் சென்றது. குகை இருளாக இருந்தது. சற்று நேரத்தில் அந்தப் பறவை வெளியே வந்தது. வந்தபோது, அதன் சொண்டிலிருந்த, வாயிலிருந்த இரையைக் காணவில்லை. அது மீண்டும் போய்விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் அதே பறவை மீண்டும் சற்று உணவை எடுத்துக்கொண்டு வந்தது; உள்ளே சென்றது; மீண்டும் திரும்பிப் போனது. இவ்வாறு மூன்று நான்கு தடவைகள் இந்த நிகழ்வு நடந்தது.

நான் உள்ளே போய் சற்று கூர்ந்து பார்த்தபோது அந்த இருண்ட குகைக்குள்ளே ஒரு குருவிக்கூடு! அந்தக் கூட்டிலே ஒரு பறவை. அந்தப் பறவைக்கு கண்பார்வை இருக்கவில்லை. பறக்கக்கூடிய நிலையிலும் இருக்கவில்லை. ஒரு முடமான, குருடான பறவையாக இருந்தது. அந்தப் பறவைக்குத்தான் இந்தப் பறவை இவ்வாறு ஒருநாளைக்கு பலமுறை இரைகொண்டு வந்து கொடுத்ததை நான் கவனித்தேன். சுபுஹானல்லாஹ்!
இந்தக் காட்டிலேஉயிரினங்களுக்குத் தேவையான எந்த வாழ்வாதாரம் இந்த இடத்திலே, இந்தக் குகையிலே, இந்த இருளுக்குள், இந்தக் கூட்டில் வாழ்கிற, இந்த முடமான, குருடான, பறவைக்கேரிஜ்க் (உணவு) கொடுக்கக்கூடிய அல்லாஹ் எனக்கும் தரமாட்டானாஏன் நான் உணவுக்காக உழைப்புக்காக இவ்வளவு சிரமப்படவேண்டும்? என்று சிந்தித்து, எனது முடிவை மாற்றி நான் ஊர் திரும்பி விட்டேன் என்று (ஸகீக்-உல்-பல்கி) சொன்னார்கள்.

(உஸ்தாத்) இப்ராஹிம்-பின்-அத்ஹம் ரஹ்மத்துலாஹ் அவர்கள் (தன் சீடரான) ஸகீக்-உல்-பல்கியைப் பார்த்து, ‘ஸகீக்-அல்-பல்கியே.. உமது பார்வை வித்தியாசமானதொரு பார்வை. வினோதமான ஒரு பார்வை! நான் இதை எப்படிப் பார்க்கிறேன் தெரியுமா, ஸகீக்கே..? முடமான, குருடான, பிறர் தயவில் வாழுகின்ற அந்தப் பறவையாக இருக்காமல், தனக்கும் உணவு தேடி, மற்றொரு ஜீவனுக்கும் உணவு தேடி, தானும் வாழ்ந்து இன்னொரு ஜீவனையும் வாழவைக்கிற அடுத்த பறவையை ஏன் நீர் பார்க்கவில்லை? ஏன் அந்தப் பறவையாக நீர் இருக்கக் கூடாது?’ என்று கேட்டபோது ஸகீக்-உல்-பல்கியின் கண் திறக்கிறது…’
-------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்குத் தெரிந்திருக்கும், ‘ரிஜ்க்என்றால் வெறும் உணவு மட்டுமல்ல. இறைவன் கொடுத்த எல்லா கொடைகளும் ரிஜ்க்தான். ரிஜ்க்பற்றி விலாவாரியாக விளக்கிய எங்கள் கம்பெனி PRO (மிஸிரி), ‘ உடை ஒரு ரிஜ்க்’, வேலை ஒரு ரிஜ்க்’ , பிள்ளைகள் ஒரு ரிஜ்க்’ , மனைவி ஒரு ரிஜ்க்என்று சொல்லிக்கொண்டே போனான்.

மனைவியா? அது ‘RISK’ அல்லவா ?!’ என்று நான் கேட்டதும் சந்தோஷத்தில் அப்படியே என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டுவிட்டான்!

எரிப்பதா ..!! புதைப்பதா..?


     ஒரு மனிதன் இறந்ததும்  புதைப்பது நல்லதா  அல்லது எரிப்பது நல்லதான்னு  விவாதத்தை தொடங்கினார் நண்பர் ஒருவர் . அவரது வாதம் எரிப்பதுதான் நல்லது .புதைத்து வைப்பது இயற்கைக்கு மற்றும் அவர் சார்ந்த மதத்திற்கு  நல்லது இல்லை என்றும் வாதிட்டார்
 முதலில் எரிப்பதால் வரும் தீங்குகளை பார்க்கலாம்
      ஒரு உடலை எரிக்க சுமார் எவ்வளவு விறகு தேவை என்று நமக்கு எல்லாம் தெரியும் .அந்த விறகு கிடைக்க எத்தனை மரத்தை  வெட்ட வேனும் .ஒரு மரம் முழுமையாக வளர எத்தனையோ காலம் ஆகும் போது அதை வளர்ப்பது எளிதா இல்லை அதை வெட்டி நெருப்பில் இடுவது அழகா..!!
    ஏற்கனவே  மரங்கள் எல்லாம் வெட்டி அதாவது காடுகள் எல்லாம் அழிந்து வரும் போது இதுக்காகவும் வீண் செலவு செய்வது தேவையா.? காடுகள் அழிந்தால் மழைப்பொழிவு குறையும் . மழைக் குறைந்தால் விவசாயம் பாதிக்கும் .நிலத்தடி நீர் குறையும் .
     சரி எரிக்க மரம் வேண்டாம் .தற்காலத்தில்  மின்சார அடுப்பு வந்து விட்டது .அதில் எரித்தால் நிமிடத்தில் சாம்பலாகி விடும் என்று சொல்கிறார்கள். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விட்டார்கள். ஒரு மனிதனை சுட்டுப்பொசுக்க  எவ்வளவு  மின்சாரம் செலவாகும் ? எத்தனை உயர் அழுத்தம் தேவை..?  எத்தனை யூனிட் ஓடும். ?...!!  இப்போது ஒரு டியூப்  லைட் ஒரு யூனிட் ஓடினாலே பயந்துகிட்டு  மின்சார சேமிப்புன்னு சொல்லி , அதை விட குறைந்த அளவு மின்சாரத்தை உபயோகிக்கும் (எனர்ஜி சேவர் ) எலெக்டிரானிக்  பல்ப் வாங்கி பயண்படுத்தும் சூழ்நிலை உருவாகி இருக்கும் நேரத்தில் அவசியமான உபயோகத்துக்கே  மின் தடங்கல் மணி கணக்கில் இருக்கும் போது இத்தனை பவர் உள்ள மின் தகனமூட்டி நமக்கு தேவையா..?
  .
     சரி இதில் அடுத்ததாக இந்த மர நெருப்பு , மின்சார நெருப்பிலிருந்து வரும் புகை , அதாவது கேஸ்.உடல் எரிந்து போகும் போது அதிலிருந்து வெளி கிளம்பும் அபாயகரமான விஷ வாயு எங்கே போகிறது ?  ஏற்கனவே ஓசோன் படலத்தில்  ஓட்டை  சுத்தமான காற்று கிடைக்காமல் வளி மண்டலம் மாசுபட்டு இருக்கும் போது  புது விதமாக வாயுக்கள் எங்கே போகும்..?
    இதில் சொன்னது எல்லாம் ஒரு இறந்த நபரை  எரிக்கும் போது மட்டுமே...!!  ஒரு நாளைக்கு எத்தனையோ  பேர் இறக்கிறார்கள். அவருக்கு ஆகும் மரச்செலவு , மின்சார செலவு , வளி மண்டல மாசு எவ்வளவு இருக்குமுன்னு இதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்
   குரானில்  இறைவன் சொல்லும் போது . ஆதமின் மகன் தன் சகோதரனை வரம்பு மீறி கொன்றவுடன் அந்த உடலை என்ன செய்வது அதனை எப்படி மறைப்பது என்று தெரியாமல் இருக்கும் போது நாம் ஒரு காகத்தை அனுப்பினோம் .அது மண்னை கீறீ காட்டியது . அதன் படி அவர்  மற்றவரை புதைத்தார் “   இதன் படி மனித உலகில்  முதல் உடல் எரிக்கப்படவில்லை புதைக்கதான் பட்டது.  
  மனிதனை புதைக்கும் போது மரம் வெட்டப்படுவதில்லை .அதுக்கான மனித உழைப்பு  செலவாவதில்லை. மழைப்பொழிவும்  தடைபடுவதில்லை. விவசாயம் பாதிப்படைவதில்லை  
   அதிக அளவு மின்சாரம் வீனாவது தடுக்கப்படுவதுடன். தொழிற்சாலைக்கோ  அல்லது வீட்டு உபயோகத்துக்கோ பயண்படுகிறது .  அத்துடன் அபாயகரமான விஷ வாயு வெளிப்படுவதில்லை. காற்று  அதன் இயல்பு நிலையில் இருக்கிறது .
   மண்ணில் உள்ள நுண்ணீயிரிகள் ,பாக்டீரியாக்கள்  மனித உடலை மட்கச்செய்து மண்ணிற்கே எருவாக ஆக்குகிறது . மண்ணிலுள்ள நைட்ரஜன் அளவு அமோனியா போன்ற வற்றை பாதுகாப்பன அளவுக்கு மாற்றி விடுகின்றது . உடலை புதைப்பதால் இதன் படி மனித இனத்திற்கு அதிக அளவு பலன்தான்  கிடைக்கிறது .
   ஆனால் சிலசாஸ்திரங்கள் சம்பிராதயங்கள் என்று சொல்லி சிலர் இன்னும் மக்களை சிந்திக்க விடாமல் முட்டாளாகவே வைத்திருக்கிறார்கள் . நான் இதில் குர் ஆன் வசனத்தை சொன்னது உலகின் முதலில் உடல் அடக்கம் செய்வது எப்படி ஏற்பட்டது என்பதை சொல்லவே மட்டும் .நண்பர் ஏதோ புரிந்தது போல் கடைசியில் தலையாட்டினார்.