இஸ்லாமிய உலகத்திலே ரஸூல் (ஸல்) அவர்களுக்கு , அவரின் சொல் செயல் அனைத்திற்கும் பெரு மதிப்பு இருக்கிறது . இது உலக முடிவு நாள் வரையிலும் இருக்கும் . அவர்கள் இறை செய்தியை முழுமையாக சொல்லிவிட்டே சென்றுள்ளார்கள் . இதை விளங்கிக்கொள்வதில்தான் பல சிக்கல்கள் உண்டாகுகிறது.
இந்த சிக்கலை உண்டாக்குவது சாதாரன ஆள் இல்லை .நன்கு படித்த ஆலீம்கள் என்ற பெயரெடுத்த ஆசான்கள்தான் . எங்கோ ஒரிடத்தில் சொல்லப்படுகின்ற செய்தியினை நம்பி தானும் கெட்டு அடுத்த ஆட்களையும் கெடுத்துமில்லாமல் நாம் சொல்லபோனால் அவரை விடவா நீ அதிகம் தெரிந்தவன் என்ற ஒற்றை வரியில் சொல்லி போகும் கொடூரம் என்ன சொல்வது.
அந்த சிக்கலில் இரெண்டை இதில் பார்க்கலாம் .
ஒரு இடத்தில் கடமையான(பர்ஜ்) தொழகையானது நடக்கும் போது , வெளியிலிருந்து வருபவர் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளவேண்டும். இது ஒருவர் சாதாரனமாக தொழும் தொழுகையின் பலனை விட கூட்டமாக (ஜமாத்)தொழுத 70 மடங்கு நன்மையை பெற்றுக்கொள்கிறார். ஒரு வேளை அவர்கள் கடைசி தொழுகையாக இருந்தாலும் ( அதாவது கடைசி ரக்காத் ) சரி. மீதியை தொடர்ந்து முடிக்க வேண்டும் .இதே முறையில்தான் வெள்ளி (ஜும்மா) தொழுகையும் .மற்றும் எல்லாவித தொழுகையின் முறையும் இதுதான்.
சுன்னத் , நஃபில் போன்ற அதிகமான தொழுகை, தொழாவிட்டாலும் குற்றமில்லை .ஏன் தொழவில்லை என்று இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான் .வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல பள்ளிக்காக இரெண்டு (ரக்காத்) தொழுதுக்கொள்ளுங்கள் . மற்றும் கடமையான தொழுகையில்லாத்தை வீட்டிலேயே தொழுதுக் கொள்ளுங்கள் . இதன் மூலம் உங்கள் வீடு கபர்ஸ்தான் (மயான பூமி) ஆகாமல் தப்பிக்கும் .
ஆனால் நிறைய இடங்களில் என்னுடன் வரும் எத்தனையோ பேர் காலை தொழுகைக்காக பள்ளிவாசல் போகும் போது அங்கே இமாம் பஜர் தொழகை ஆரம்பிக்கும் போது நம்முடன் வந்தவர் ஒரு ஓரமாக ஒதுங்கி தனியாக இரெண்டு ரக்காத் சுன்னத்தொழகை தொழ ஆரம்பித்தார் . நான் கையை பிடித்து தரதரன்னு இழுத்துகிட்டே போய் கூட்டத்தில் விட்டேன். அவர் தொழுது முடித்தும் ரொம்பவே வருத்தப்பட்டார் .பஜர் தொழுகைக்கு முன்னால் இரெண்டு ரக்காத் தொழுகை ரொம்பவும் முக்கியம் .அது இல்லாமல் பஜர் தொழுகையே கிடையாதுன்னு வாதிட்டார் . ஊரில் அவர் இமாம் இப்படித்தான் சொன்னாராம் .கடமையான பஜர் தொழுகையை விட சுன்னத் தொழுகை முக்கியமாம் .
இதில் யாரை குறை சொல்வது .இவரது அறியாமையா..? இல்லை வழி கெடுத்த அந்த இமாமா..? படிப்பறிவு இல்லாத பாக்கிஸ்தானி களிடமும் , நமது தமிழர்களிடமும் தான் இது அதிகம் இருப்பது வேதனையின் உட்சக்கட்டம் . இதுப்போலவே பள்ளிகளின் நட்ட நடுவே நின்று தொழுவது . தனக்கு முன்னால் ஏதாவது ஒன்று தடுப்பு வைக்காம்ல் தொழுவது கூடாது . அப்படி தொழுபவர் குறுக்கே போவதின் தீங்கு உங்களுக்கு தெரிந்திருந்தால் 40 வருடம் கூட பொருமையுடன் அங்கேயே நின்றிருப்பீகள் ..இதுவும் ஒரு ஹதீஸ்.
ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!
அந்தப் பறவை
‘அந்தப் பறவை.. அந்தக் குகைக்குள் சென்றது. குகை இருளாக இருந்தது. சற்று நேரத்தில் அந்தப் பறவை வெளியே வந்தது. வந்தபோது, அதன் சொண்டிலிருந்த, வாயிலிருந்த இரையைக் காணவில்லை. அது மீண்டும் போய்விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் அதே பறவை… மீண்டும் சற்று உணவை எடுத்துக்கொண்டு வந்தது; உள்ளே சென்றது; மீண்டும் திரும்பிப் போனது. இவ்வாறு மூன்று நான்கு தடவைகள் இந்த நிகழ்வு நடந்தது.
நான் உள்ளே போய் சற்று கூர்ந்து பார்த்தபோது அந்த இருண்ட குகைக்குள்ளே ஒரு குருவிக்கூடு! அந்தக் கூட்டிலே ஒரு பறவை. அந்தப் பறவைக்கு கண்பார்வை இருக்கவில்லை. பறக்கக்கூடிய நிலையிலும் இருக்கவில்லை. ஒரு முடமான, குருடான பறவையாக இருந்தது. அந்தப் பறவைக்குத்தான் இந்தப் பறவை – இவ்வாறு ஒருநாளைக்கு பலமுறை – இரைகொண்டு வந்து கொடுத்ததை நான் கவனித்தேன். சுபுஹானல்லாஹ்!
இந்தக் காட்டிலே, உயிரினங்களுக்குத் தேவையான எந்த வாழ்வாதாரம் இந்த இடத்திலே, இந்தக் குகையிலே, இந்த இருளுக்குள், இந்தக் கூட்டில் வாழ்கிற, இந்த முடமான, குருடான, பறவைக்கே… ரிஜ்க் (உணவு) கொடுக்கக்கூடிய அல்லாஹ் எனக்கும் தரமாட்டானா? ஏன் நான் உணவுக்காக உழைப்புக்காக இவ்வளவு சிரமப்படவேண்டும்? என்று சிந்தித்து, எனது முடிவை மாற்றி நான் ஊர் திரும்பி விட்டேன் என்று (ஸகீக்-உல்-பல்கி) சொன்னார்கள்.
(உஸ்தாத்) இப்ராஹிம்-பின்-அத்ஹம் ரஹ்மத்துலாஹ் அவர்கள் (தன் சீடரான) ஸகீக்-உல்-பல்கியைப் பார்த்து, ‘ஸகீக்-அல்-பல்கியே.. உமது பார்வை வித்தியாசமானதொரு பார்வை. வினோதமான ஒரு பார்வை! நான் இதை எப்படிப் பார்க்கிறேன் தெரியுமா, ஸகீக்கே..? முடமான, குருடான, பிறர் தயவில் வாழுகின்ற அந்தப் பறவையாக இருக்காமல், தனக்கும் உணவு தேடி, மற்றொரு ஜீவனுக்கும் உணவு தேடி, தானும் வாழ்ந்து இன்னொரு ஜீவனையும் வாழவைக்கிற அடுத்த பறவையை ஏன் நீர் பார்க்கவில்லை? ஏன் அந்தப் பறவையாக நீர் இருக்கக் கூடாது?’ என்று கேட்டபோது ஸகீக்-உல்-பல்கியின் கண் திறக்கிறது…’
-------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்குத் தெரிந்திருக்கும், ‘ரிஜ்க்’ என்றால் வெறும் உணவு மட்டுமல்ல. இறைவன் கொடுத்த எல்லா கொடைகளும் ‘ரிஜ்க்’தான். ‘ரிஜ்க்’ பற்றி விலாவாரியாக விளக்கிய எங்கள் கம்பெனி PRO (மிஸிரி), ‘ உடை ஒரு ‘ரிஜ்க்’, வேலை ஒரு ‘ரிஜ்க்’ , பிள்ளைகள் ஒரு ‘ரிஜ்க்’ , மனைவி ஒரு ‘ரிஜ்க்’ என்று சொல்லிக்கொண்டே போனான்.
‘மனைவியா? அது ‘RISK’ அல்லவா ?!’ என்று நான் கேட்டதும் சந்தோஷத்தில் அப்படியே என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டுவிட்டான்!
ஒரு மனிதன் இறந்ததும் புதைப்பது நல்லதா அல்லது எரிப்பது நல்லதான்னு விவாதத்தை தொடங்கினார் நண்பர் ஒருவர் . அவரது வாதம் எரிப்பதுதான் நல்லது .புதைத்து வைப்பது இயற்கைக்கு மற்றும் அவர் சார்ந்த மதத்திற்கு நல்லது இல்லை என்றும் வாதிட்டார்
முதலில் எரிப்பதால் வரும் தீங்குகளை பார்க்கலாம்
ஒரு உடலை எரிக்க சுமார் எவ்வளவு விறகு தேவை என்று நமக்கு எல்லாம் தெரியும் .அந்த விறகு கிடைக்க எத்தனை மரத்தை வெட்ட வேனும் .ஒரு மரம் முழுமையாக வளர எத்தனையோ காலம் ஆகும் போது அதை வளர்ப்பது எளிதா இல்லை அதை வெட்டி நெருப்பில் இடுவது அழகா..!!
ஏற்கனவே மரங்கள் எல்லாம் வெட்டி அதாவது காடுகள் எல்லாம் அழிந்து வரும் போது இதுக்காகவும் வீண் செலவு செய்வது தேவையா.? காடுகள் அழிந்தால் மழைப்பொழிவு குறையும் . மழைக் குறைந்தால் விவசாயம் பாதிக்கும் .நிலத்தடி நீர் குறையும் .
சரி எரிக்க மரம் வேண்டாம் .தற்காலத்தில் மின்சார அடுப்பு வந்து விட்டது .அதில் எரித்தால் நிமிடத்தில் சாம்பலாகி விடும் என்று சொல்கிறார்கள். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விட்டார்கள். ஒரு மனிதனை சுட்டுப்பொசுக்க எவ்வளவு மின்சாரம் செலவாகும் ? எத்தனை உயர் அழுத்தம் தேவை..? எத்தனை யூனிட் ஓடும். ?...!! இப்போது ஒரு டியூப் லைட் ஒரு யூனிட் ஓடினாலே பயந்துகிட்டு மின்சார சேமிப்புன்னு சொல்லி , அதை விட குறைந்த அளவு மின்சாரத்தை உபயோகிக்கும் (எனர்ஜி சேவர் ) எலெக்டிரானிக் பல்ப் வாங்கி பயண்படுத்தும் சூழ்நிலை உருவாகி இருக்கும் நேரத்தில் அவசியமான உபயோகத்துக்கே மின் தடங்கல் மணி கணக்கில் இருக்கும் போது இத்தனை பவர் உள்ள மின் தகனமூட்டி நமக்கு தேவையா..?
.
சரி இதில் அடுத்ததாக இந்த மர நெருப்பு , மின்சார நெருப்பிலிருந்து வரும் புகை , அதாவது கேஸ்.உடல் எரிந்து போகும் போது அதிலிருந்து வெளி கிளம்பும் அபாயகரமான விஷ வாயு எங்கே போகிறது ? ஏற்கனவே ஓசோன் படலத்தில் ஓட்டை சுத்தமான காற்று கிடைக்காமல் வளி மண்டலம் மாசுபட்டு இருக்கும் போது புது விதமாக வாயுக்கள் எங்கே போகும்..?
இதில் சொன்னது எல்லாம் ஒரு இறந்த நபரை எரிக்கும் போது மட்டுமே...!! ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் இறக்கிறார்கள். அவருக்கு ஆகும் மரச்செலவு , மின்சார செலவு , வளி மண்டல மாசு எவ்வளவு இருக்குமுன்னு இதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்
குரானில் இறைவன் சொல்லும் போது . ஆதமின் மகன் தன் சகோதரனை வரம்பு மீறி கொன்றவுடன் அந்த உடலை என்ன செய்வது அதனை எப்படி மறைப்பது என்று தெரியாமல் இருக்கும் போது ” நாம் ஒரு காகத்தை அனுப்பினோம் .அது மண்னை கீறீ காட்டியது . அதன் படி அவர் மற்றவரை புதைத்தார் “ இதன் படி மனித உலகில் முதல் உடல் எரிக்கப்படவில்லை புதைக்கதான் பட்டது.
மனிதனை புதைக்கும் போது மரம் வெட்டப்படுவதில்லை .அதுக்கான மனித உழைப்பு செலவாவதில்லை. மழைப்பொழிவும் தடைபடுவதில்லை. விவசாயம் பாதிப்படைவதில்லை
அதிக அளவு மின்சாரம் வீனாவது தடுக்கப்படுவதுடன். தொழிற்சாலைக்கோ அல்லது வீட்டு உபயோகத்துக்கோ பயண்படுகிறது . அத்துடன் அபாயகரமான விஷ வாயு வெளிப்படுவதில்லை. காற்று அதன் இயல்பு நிலையில் இருக்கிறது .
மண்ணில் உள்ள நுண்ணீயிரிகள் ,பாக்டீரியாக்கள் மனித உடலை மட்கச்செய்து மண்ணிற்கே எருவாக ஆக்குகிறது . மண்ணிலுள்ள நைட்ரஜன் அளவு அமோனியா போன்ற வற்றை பாதுகாப்பன அளவுக்கு மாற்றி விடுகின்றது . உடலை புதைப்பதால் இதன் படி மனித இனத்திற்கு அதிக அளவு பலன்தான் கிடைக்கிறது .
ஆனால் சிலசாஸ்திரங்கள் சம்பிராதயங்கள் என்று சொல்லி சிலர் இன்னும் மக்களை சிந்திக்க விடாமல் முட்டாளாகவே வைத்திருக்கிறார்கள் . நான் இதில் குர் ஆன் வசனத்தை சொன்னது உலகின் முதலில் உடல் அடக்கம் செய்வது எப்படி ஏற்பட்டது என்பதை சொல்லவே மட்டும் .நண்பர் ஏதோ புரிந்தது போல் கடைசியில் தலையாட்டினார்.
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சுவர்கத்தின் திரவு கோல் எது என்று கேட்டால்
உடனே நாம் எல்லோரும் சொல்வோம் தொழுகை என்று
எத்தனை பேர் அதை முறையாக கடைப்பிடிக்கிறோம்.
தொழுகையை நேரம் குறிப்பிட்ட கடமையாக
நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
ஒரு பயணம் மேற்க்கொண்டால் கூட நாம் முதலில்
யோசிப்பது மதிய உணவு எங்கே சாப்பிடலாம் இரவு உணவு எங்கே சாப்பிடலாம் எங்கு சுவையாக இருக்கும்
எங்கே நியாயவிலையில் கிடைக்கும் எங்கே சுத்தமாக இருக்கும்
என்று தானே தவிர லுஹரையும் அசரையும் எங்கு தொழலாம்
மஃக்ரிபும் இஷாவையும் எங்கு தொழலாம் என்று நினைப்பவர்கள்
எத்தனை பேர்.
இது அறியாமையில் செய்யும் தவறு அன்று அறிந்தே செய்யும் தவறு.
எவனொருவனிடத்தில் தொழுகையில்லையோ அவனிடமிருந்து
வேறு எந்த ஒரு அமல்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நபி மொழி
மாதக்கணக்கில் நோன்பு வைத்தலும்
கோடி கோடியாக தர்மம் செய்தலும்
இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுலும்
யாதொருப்பயனும் இல்லை அவனிடத்தில் தொழுகையில்லை என்றால்.
வீண் அரட்டைக்காகவும் கேளிக்கைகளுக்காகவும்
தொழுகயை தள்ளி வைப்பவர்கள் தான் நம்மில் பலர்.
இறைவன் எந்த அளவுக்கு வலியுறுத்தி இருக்கிறானோ
அதைவிட சுலபமாகவும் ஆக்கியுள்ளான் .
பயணத்தில் இருக்கிறாயா லுஹரையும் அசரையும் சேர்த்து தொழுதுகொள்
மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுதுகொள்.
அப்பொழுது கூட மக்ரிபை தவிர மற்றதை பாதியாக குறைத்துக்கொள்
{நான்கு ரக்காத் தொழுகையை எல்லாம் இரண்டாக }
நின்டு தோழமுடியவில்லைய உட்கார்ந்த்து தொழுதுகொள்
அதுவும் முடியவில்லையா படுக்கையில் தொழு .
மறதியில் உறங்கிவிட்டாய விழித்தவுடன் தொழு.
ஒழு செய்ய தண்ணீர் கிடைக்கவில்லையா அல்லது முடியவில்லையா
தயமம் செய்துகொள்.
படைத்தவன் தொழுகையை எந்தளவு சுலபமாக்கியுள்ளன் என்பதை நாம் சிந்திக்கவேண்டமா.
சுவர்கத்தின் திறவுகோல் எது என்று கேட்டால்
நாம் எல்லோரும் சொல்வோம் தொழுகை என்று
அந்த உயர்ந்த அந்தஸ்த்தான சுவர்க்கம் கிடைத்த நன்மக்களாக
நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக
ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமின்.
{இன்ஷா அல்லாஹ் தொடரும்.}
வருஷத்தின் கடைசி மாதங்கள் வரும் போதே மக்களுக்கு கவலைகள் கூடவே வந்து விடும் . குழந்தைகள் உள்ள வீட்டிற்கு எல் கே ஜி அட்மிஷன் கவலை, அதுவே வளர்ந்து விட்டால் காலேஜ் அட்மிஷன் கவலை . கிடைக்குமோ கிடைக்காதோ இப்படி. இதில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கோ எப்படி எழுதப்போகிறோம் . பாஸ் மார்க் கிடைக்குமோ கிடைக்காதோ நம்மை விட கூட படிக்கும் இவன்(ள்) நம்மை விட அதிக மார்க் எடுத்து விடுவார்களோ இப்படி பட்ட கவலைகள்.
ஒருவன்(ள்) எப்படி வருஷம் முழுவதும் படித்தான்(ள்) என்பதை வரும் ரிசல்ட் பேப்பர் சொல்லி விடுகிறது..வரும் முடிவு சிலருக்கு சாதகமாக இல்லாவிட்டால் பாதகமான முடிவினையும் எடுத்து விட்டு குடும்பத்தவரை காலம் முழுதும் கண்ணீர் விடவும் செய்கிறார்கள்..
இந்த படிப்பில் மொத்தம் மூனுவகை இருக்கு அதாவது இறுதி பரிட்சையில் வெற்றி பெற மூன்று வித வழிகள் முதல் வகை எப்படின்னா . தினமும் ஒழுங்காக பாடத்தை படிப்பது. படிச்சதும் இல்லாமல் அதை வீட்டில் வந்து திரும்ப படிச்சி பார்ப்பது. தொடர்ந்து படிச்சி வருவதால எதுவும் அத்தனை சீக்கிரம் மறக்காது
இரெண்டாவது பரிட்சை நேரத்தில நேரம் காலம் பார்க்காம விடாம தொடர்ந்து படிச்சி அந்த குறுகிய காலத்துல மனப்பாடம் செய்து அப்படியே போய் பரிட்சை ஹாலில் உட்கார்ந்து எழுதி விட்டு வருவது . இதனால எப்படியாவது பாஸ் மார்க் கிடைத்து விடும்.
மூனாவது வருஷம் முழுவதும் வாழ்க்கையை என் ஜாய் செய்து விட்டு கடைசி நேரத்துல அதாவது பரிட்சைக்கு போகும் கடைசி நேரம் மட்டும் பிட் பேப்பர் கொண்டு போவது . மாட்டினால் ஃபெயில் , அவமானம் , மாட்டாவிட்டால் பாஸாவது , பார்டர் மார்க்கில் ஸ்கோர் செய்வது..
இப்படிப்பட்ட ஒரு பரிட்சைதான் அவனை மேற்கொண்டு டாக்டராகவோ இல்லை ஒரு எஞ்ஜினியராகவோ அடையாளாம் காட்டுது. அதுக்குதான் இத்தனை ஆர்பாட்டங்களும் . இதை விட இன்னொரு வழி இருக்கு அதாவது இதுதான் வரும் இதைதான் கேட்போம் என்று முதலிலேயே பேப்பர் குடுத்து விட்டால் எல்லாருமே பாஸாகிடுவோமே அங்கே தோல்வி என்ற பேச்சே கிடையாதே..!!
இதைப்போலவே நமது வாழ்க்கை பரிட்சைகளில் சில கேள்விகள் இருக்கு அதில் ஜெயித்தால் மட்டுமே நீண்ட சுவர்க வாழ்வு இருக்கு. அப்படி இருக்காதே செத்தால் அதுக்கு பிறகு நமக்கு என்ன நடக்குமுன்னு தெரியாதே. உங்ககிட்ட யாராவது வந்து சொன்னாங்களான்னு கேட்கலாம் . உங்களுக்கு எப்படி தெரியுமுன்னும் தோனலாம் . நம்மையே படைச்ச இறைவனுக்கு நாம என்ன கேட்போமுன்னு தெரியாதா..? அதுக்குதான் நேர்வழிகாட்ட பல இறை தூதர்களையும் அனுப்பி அதுக்கு தகுந்த விளக்கத்தையும் குடுத்தான்
மண்ணறையில் நம் உடலை வைக்கும் போது கடைசி கேள்வி என்ன கேட்பாங்கன்னு தெரியாமல் நாம் அங்கே விழிக்கக்கூடாது என்பதற்காக , முதலிலேயே நமக்கு பாட பேப்பர் கிடைத்து விட்டது .இந்த மூனு கேள்விதான் வேறு கேள்வியே கிடையது
இதுதான் அந்த கேள்வி
( ( 1) யார் உனது இறைவன் ?
(2) யார் உனது நபி ?
(3) எது உனது வாழ்க்கை வழிமுறை ?
இதுதான் அந்த பதில்
(1) ஒரே இறைவன் (( அரபியில் அல்லாஹ் ))
(2) முஹம்மது நபியே (ஸல்)
(3) இவரின் வழிமுறையே எனது வாழ்க்கை வழி முறையும்
எவ்வளவு ஈஸியான கேள்வி .எத்தனை எளிய பதில் .இதை தவிர வேறு கேள்வியும் கிடையாது பதிலும் மாற்றப்பட மாட்டாது . இதில் தவறாக போனால் அதுக்கு பிறகு வரும் எல்லாமே தப்பாதானே இருக்கும் . இதை எனக்கு யாரும் சொல்லவில்லையே ..எனக்கு தெரியாதேன்னும் சொல்ல முடியாது .
இறைவழியில் அறவழியில் வாழ்ந்த (வாழும்) ஒருவருக்கு இது மிகமிக சுலபமாகவே இருக்கும். அதாவது “”பொது வழியில் கீழே கிடக்கும் சிறு முள்-ஐ எடுத்து அப்புறப்படுத்துபவரும் என்னை சேர்ந்தவரே ”” இதுவும் ஒரு நபி வழி (மொழி ) தான் . இறைவழியில் நடந்து நாமும் நல்லோர் கூட்டத்தில் சேர பிராத்தனை செய்வோம் .
Filed under:
காய்கறி கடையோ இல்லை , மீன் கடைக்கோ இல்ல எந்த விதமான கடைக்கோ நாம் போனால் சாமான் வாங்கிய பிறகு நாம் கேக்கும் அடுத்த கேள்வி கொஞ்சம் கொசுறு குடுங்கன்னு ..அதாவது டிப்ஸ் மாதிரி எடைக்கு வராத மாதிரி கேட்பது ஒரு கலை .. இந்த விஷயத்தில் பெண்கள் கில்லாடிகள் அழகாக பேசி விலையையையும் கொஞ்சம் குறைத்து விடுவர்கள் . ஒரு கிலோ கத்திரிகாயிலேயே இல்லை தக்காளியிலேயே ஒரு பீஸ் அதிகம் போடும் போது அது கடை முதலாளிக்கோ இல்லை நமக்கோ ஒரு பொருட்டா தெரிவதில்லை.
அதுப்போல மீன் கடையில் ஒரு மீன் கூடுதலாகவும் , இறைச்சி கடையில் 100 கிராம் இல்லை 150 கிராம் கூடுதலாக தரும் போதும் அது ஒரு பெரிய விவரமாக புரிவதில்லை , இல்லை தெரிவதில்லை அது நமது ஒரு லாபமாகத்தான் தெரிகிறது . இப்படி எந்த பொருளாக இருந்தாலும் பேரம் பேசி வாங்கிய பிறகு இந்த தனிப்பட்ட செயல் கண்டிப்பாக நடக்கும் ..
இதுவே ரேஷன் கடையா இருந்தால் நிலைமை அப்ப்டியே தலைகீழா இருக்கும் மண்ணென்னையோ இல்லை பாமாயில் போல எண்னெய் பொருட்கள் வாங்கும் போது ஊத்திய வேகத்திலேயே நுரை அடித்து அதில் 200 மில்லி மாதிரி நமக்கு குறைந்து விடும்..இதுவே அரிசி மாதிரி பொருட்கள் , சீனி கேட்கவே வேண்டாம் எடை முள் நேராக வருவதுக்கு முன்னாலேயே தட்டை கையில் எடுத்து விடுவார்கள் . அங்கே நமக்கு பேசவே நேரம் இருக்காது காரணம் நாம அதை விட்டு வேர கடையில் போய் சாமான் வாங்க முடியாது.
இதுவே தங்கம் வாங்கும் கடையில் நிலைமை தலைக்கீழ் தராசு காற்றுப்போகாத கண்ணாடி பெட்டியினுள் வைத்து மிக மெல்லிய எடைகற்கள் போட்டு மில்லி ...மில்லி அளவுகளுக்கு கால்குலேட்டர் வைத்து நம்மிடம் காசு கறந்து விடுவார்கள்.. ஏன் தங்கம் விலை அது மாதிரி ..காய்கறி கடை மாதிரி இங்கே குடுத்தால் அப்புரம் தங்கத்துக்கே மதிப்பில்லை
இதைப்போல தான் நமது பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப இறைவனிடம் உள்ள தராசும் . அங்கே உள்ள கூட்டத்தில் ரேஷன் கடையைப்போல எதிர்த்து பேசவோ , இல்லை வேறு இடம் மாறியோ போகமுடியாது . நகைக்கடையைப்போல அங்கே மிக மெல்லிய தராசும் இருக்கு .இறைவன் இதை பற்றி சொல்லும் போது .”” அங்கே அணுவளவும் நன்மை செய்தவன் அதனை கண்டுக்கொள்வான் அங்கே அணுவளவும் தீமை செய்தவனும் அதனை கண்டு கொள்வான் ’’
’’எந்த ஆத்மாவுக்கும் இங்கே அநியாயம் செய்யப்படமாட்டாது .அதுக்குள்ள கூலியில் எதையும் நாம் குறைக்கவே மாட்டோம் ’’
“ எவருடைய சுமையையும் (அது நல்லதோ இல்லை கெட்டதோ ) அடுத்தவர் சுமக்க முடியாத நாளை நபியே நீர் நினைவூட்டுவீராக ’’
உண்மையில் நாம இந்த உலகில் எத்தனையோ கஷ்டமான நிலைமையிலும் (( சிலருக்கு அடுத்த வேளை உணவுக்கூட கிடைப்பதில்லை )) அடுத்தவருக்காக கஷ்ட நஷ்டங்களை தாங்கிக்கொண்டு வாழ்கிறோம் . கேவலம் சில நூறு , ஆயிரம் ரூபாய்காக முதலாளியின் ஏச்சுக்கும் , பேச்சுக்கும் அடங்கி வேலை செய்ய வேண்டி வருது .ஏன் மாதம் அல்லது அந்த வேலை முடிந்து கிடைக்கும் சம்பளத்துக்காக அதனால நமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ளலாம் என்ற ஆசைதான்..
அதுப்போலவே இறைவனுக்கு பயந்து அவன் சொல்படி நடந்த நமக்கு அதுக்கு தகுந்த கூலியை நாம் மிகச்சரியாக பெறுவதே ஒவ்வொருவருக்கும் பிடித்ததாக இருக்கும் ..அங்கே தங்ககடையில் வைத்திருக்கும் தராசுப்போல நமக்கும் எடைப்போட்டால்தானே திருப்தி . அங்கு நமக்கு குறைவாக போட்டால் நம்மால் ஏற்றுக்கொள்ள தான் முடியுமா..?
அதனால் இனி நாம் செய்யும் செயல்களில் இது சின்ன தவறுதானே அதனால் என்ன ஆகிவிடப்போகிறது என்று எண்ண வேண்டாம் .அதே தவறை அடுத்தவர் நமக்கு செய்தால் என்னவாகுமுன்னு ஒரு நிமிடம் யோசிச்சால் அந்த தவறை நாம் செய்ய 100 தடவை யோசிப்போம் ..அதன் பலன் தங்க தராசில் வைத்து பார்க்கும் போது அதன் வலிமை தெரியவரும்
Subscribe to:
Posts (Atom)