இஸ்லாமிய உலகத்திலே ரஸூல் (ஸல்) அவர்களுக்கு , அவரின் சொல் செயல் அனைத்திற்கும் பெரு மதிப்பு இருக்கிறது . இது உலக முடிவு நாள் வரையிலும் இருக்கும் . அவர்கள் இறை செய்தியை முழுமையாக சொல்லிவிட்டே சென்றுள்ளார்கள் . இதை விளங்கிக்கொள்வதில்தான் பல சிக்கல்கள் உண்டாகுகிறது.
இந்த சிக்கலை உண்டாக்குவது சாதாரன ஆள் இல்லை .நன்கு படித்த ஆலீம்கள் என்ற பெயரெடுத்த ஆசான்கள்தான் . எங்கோ ஒரிடத்தில் சொல்லப்படுகின்ற செய்தியினை நம்பி தானும் கெட்டு அடுத்த ஆட்களையும் கெடுத்துமில்லாமல் நாம் சொல்லபோனால் அவரை விடவா நீ அதிகம் தெரிந்தவன் என்ற ஒற்றை வரியில் சொல்லி போகும் கொடூரம் என்ன சொல்வது.
அந்த சிக்கலில் இரெண்டை இதில் பார்க்கலாம் .
ஒரு இடத்தில் கடமையான(பர்ஜ்) தொழகையானது நடக்கும் போது , வெளியிலிருந்து வருபவர் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளவேண்டும். இது ஒருவர் சாதாரனமாக தொழும் தொழுகையின் பலனை விட கூட்டமாக (ஜமாத்)தொழுத 70 மடங்கு நன்மையை பெற்றுக்கொள்கிறார். ஒரு வேளை அவர்கள் கடைசி தொழுகையாக இருந்தாலும் ( அதாவது கடைசி ரக்காத் ) சரி. மீதியை தொடர்ந்து முடிக்க வேண்டும் .இதே முறையில்தான் வெள்ளி (ஜும்மா) தொழுகையும் .மற்றும் எல்லாவித தொழுகையின் முறையும் இதுதான்.
சுன்னத் , நஃபில் போன்ற அதிகமான தொழுகை, தொழாவிட்டாலும் குற்றமில்லை .ஏன் தொழவில்லை என்று இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான் .வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல பள்ளிக்காக இரெண்டு (ரக்காத்) தொழுதுக்கொள்ளுங்கள் . மற்றும் கடமையான தொழுகையில்லாத்தை வீட்டிலேயே தொழுதுக் கொள்ளுங்கள் . இதன் மூலம் உங்கள் வீடு கபர்ஸ்தான் (மயான பூமி) ஆகாமல் தப்பிக்கும் .
ஆனால் நிறைய இடங்களில் என்னுடன் வரும் எத்தனையோ பேர் காலை தொழுகைக்காக பள்ளிவாசல் போகும் போது அங்கே இமாம் பஜர் தொழகை ஆரம்பிக்கும் போது நம்முடன் வந்தவர் ஒரு ஓரமாக ஒதுங்கி தனியாக இரெண்டு ரக்காத் சுன்னத்தொழகை தொழ ஆரம்பித்தார் . நான் கையை பிடித்து தரதரன்னு இழுத்துகிட்டே போய் கூட்டத்தில் விட்டேன். அவர் தொழுது முடித்தும் ரொம்பவே வருத்தப்பட்டார் .பஜர் தொழுகைக்கு முன்னால் இரெண்டு ரக்காத் தொழுகை ரொம்பவும் முக்கியம் .அது இல்லாமல் பஜர் தொழுகையே கிடையாதுன்னு வாதிட்டார் . ஊரில் அவர் இமாம் இப்படித்தான் சொன்னாராம் .கடமையான பஜர் தொழுகையை விட சுன்னத் தொழுகை முக்கியமாம் .
இதில் யாரை குறை சொல்வது .இவரது அறியாமையா..? இல்லை வழி கெடுத்த அந்த இமாமா..? படிப்பறிவு இல்லாத பாக்கிஸ்தானி களிடமும் , நமது தமிழர்களிடமும் தான் இது அதிகம் இருப்பது வேதனையின் உட்சக்கட்டம் . இதுப்போலவே பள்ளிகளின் நட்ட நடுவே நின்று தொழுவது . தனக்கு முன்னால் ஏதாவது ஒன்று தடுப்பு வைக்காம்ல் தொழுவது கூடாது . அப்படி தொழுபவர் குறுக்கே போவதின் தீங்கு உங்களுக்கு தெரிந்திருந்தால் 40 வருடம் கூட பொருமையுடன் அங்கேயே நின்றிருப்பீகள் ..இதுவும் ஒரு ஹதீஸ்.
ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!
Subscribe to:
Post Comments (Atom)
Riyas Says:
Assalamu Alaikkum,,
very useful post..
Posted on October 16, 2011 at 7:11 PM
குறையொன்றுமில்லை. Says:
ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!
எல்லா பிரிவினருக்குமே கூட்டுப்பிரார்த்தனை செய்வது ரொம்ப முக்கியம்தான்.
Posted on October 16, 2011 at 7:33 PM
ஸாதிகா Says:
சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டியே பள்ளிக்கு செல்வது செல்வது நல்லது.சுன்னத் தொழுகைக்காக நடந்து கொண்டிருக்கும் இமாம்ஜமாத்தை நிராகரிப்பது அறிவீனம். ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!
///
ரொம்ப ரொம்ப முக்கியம்.சகோ நல்லதொரு பதிவு.ஜஸகல்லாஹு கைரன்.
//
Posted on October 16, 2011 at 8:53 PM
ஜெய்லானி Says:
@@@Riyas Says:--//
Assalamu Alaikkum,,
very useful post..//
வாங்க ரியாஸ்... அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Posted on October 16, 2011 at 9:22 PM
ஜெய்லானி Says:
@@@Lakshmi Says:--//எல்லா பிரிவினருக்குமே கூட்டுப்பிரார்த்தனை செய்வது ரொம்ப முக்கியம்தான்.//
வாங்க லஷ்மியம்மா வாங்க ...!!
ஒருவர் சாதாரனமா பிரத்திப்பதை விட கூட்டாக பிராத்திப்பதுக்கு ஏகப்பட்ட பலன் இருக்கு . அந்த கூட்டத்தில் ஒருவர் தனக்காக கேட்டாலும் கூட அவரின் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படும் .இதுவும் ஒரு ஹதிஸ் (நபியின் பொன்மொழிகள்)தான் .
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Posted on October 16, 2011 at 9:26 PM
ஜெய்லானி Says:
@@@ஸாதிகா--//சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டியே பள்ளிக்கு செல்வது செல்வது நல்லது.சுன்னத் தொழுகைக்காக நடந்து கொண்டிருக்கும் இமாம்ஜமாத்தை நிராகரிப்பது அறிவீனம். ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!! //
வாங்க ஸாதிகாக்கா வாங்க .!! பெரும்பாலும் சுன்னத் தொழுகை தன் வீட்டிலேயே தொழுவதுதான் நல்லது.
ஒரு முறை ரஸுலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்.நான் சுன்னத் தொழுகையை பள்ளிவாசலிலேயே தொடர்ந்து தொழுதால் மக்கள் இதையும் ஒரு கடமையாகவே ஆக்கிவிடுவார்கள் . இதனால் சிலநேரம் பள்ளியில் தொழுவேன் . சில நேரம் வீட்டிலே தொழுதிடுவேன் .
ஒரு சுன்னத் தொழுகைக்காக கடமையானதை விடும் நஷ்டம் மிகப்பெரியது :-(
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Posted on October 16, 2011 at 9:34 PM
Asiya Omar Says:
//ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!//
ஆமாம் சகோ.நல்ல பகிர்வு..
Posted on October 16, 2011 at 10:20 PM
மாய உலகம் Says:
பகிர்வுக்கு நன்றி சகோ!
Posted on October 17, 2011 at 3:24 AM
அம்பாளடியாள் Says:
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....
Posted on October 25, 2011 at 12:16 AM
Jaleela Kamal Says:
அஸ்ஸலாமு அலைக்கும் தொழுகை பற்றி சிறப்பாக எழுதி இருகீங்க , பள்ளி வாசலில் சென்றது 2 ரக் அத் முன்பு என்க்கு தெரியாது, சமீபத்த்தில் தெரிந்ததில் இருந்து எப்பபோனாலும் தொழுது கொள்வது.
Posted on November 4, 2011 at 10:52 AM
Unknown Says:
இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..
Posted on November 7, 2011 at 2:41 PM