பஜர் (அதிகாலை) தொழுகை


    இஸ்லாமிய உலகத்திலே ரஸூல் (ஸல்) அவர்களுக்கு , அவரின் சொல் செயல் அனைத்திற்கும் பெரு மதிப்பு இருக்கிறது . இது உலக முடிவு நாள் வரையிலும் இருக்கும் . அவர்கள் இறை செய்தியை முழுமையாக சொல்லிவிட்டே  சென்றுள்ளார்கள் . இதை விளங்கிக்கொள்வதில்தான் பல சிக்கல்கள்  உண்டாகுகிறது.
   இந்த சிக்கலை உண்டாக்குவது சாதாரன ஆள் இல்லை .நன்கு படித்த ஆலீம்கள் என்ற பெயரெடுத்த ஆசான்கள்தான் . எங்கோ  ஒரிடத்தில்  சொல்லப்படுகின்ற செய்தியினை நம்பி தானும் கெட்டு அடுத்த ஆட்களையும் கெடுத்துமில்லாமல் நாம் சொல்லபோனால் அவரை விடவா நீ அதிகம் தெரிந்தவன் என்ற ஒற்றை வரியில் சொல்லி போகும் கொடூரம் என்ன சொல்வது.
  அந்த சிக்கலில்  இரெண்டை இதில் பார்க்கலாம் .
        ஒரு இடத்தில் கடமையான(பர்ஜ்) தொழகையானது நடக்கும் போது , வெளியிலிருந்து வருபவர் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளவேண்டும். இது ஒருவர் சாதாரனமாக தொழும் தொழுகையின் பலனை விட கூட்டமாக (ஜமாத்)தொழுத 70 மடங்கு நன்மையை பெற்றுக்கொள்கிறார். ஒரு வேளை அவர்கள் கடைசி தொழுகையாக இருந்தாலும் ( அதாவது கடைசி ரக்காத் ) சரி. மீதியை தொடர்ந்து முடிக்க வேண்டும் .இதே முறையில்தான் வெள்ளி (ஜும்மா) தொழுகையும் .மற்றும் எல்லாவித தொழுகையின் முறையும் இதுதான்.
        சுன்னத் , நஃபில் போன்ற அதிகமான தொழுகை, தொழாவிட்டாலும் குற்றமில்லை .ஏன் தொழவில்லை என்று இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான் .வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல பள்ளிக்காக இரெண்டு (ரக்காத்) தொழுதுக்கொள்ளுங்கள் . மற்றும் கடமையான தொழுகையில்லாத்தை வீட்டிலேயே தொழுதுக் கொள்ளுங்கள் . இதன் மூலம் உங்கள் வீடு கபர்ஸ்தான் (மயான பூமி) ஆகாமல் தப்பிக்கும் .
    ஆனால் நிறைய இடங்களில் என்னுடன் வரும் எத்தனையோ பேர் காலை தொழுகைக்காக பள்ளிவாசல் போகும் போது அங்கே இமாம் பஜர் தொழகை ஆரம்பிக்கும் போது நம்முடன் வந்தவர் ஒரு ஓரமாக ஒதுங்கி தனியாக இரெண்டு ரக்காத் சுன்னத்தொழகை தொழ ஆரம்பித்தார் . நான் கையை பிடித்து தரதரன்னு இழுத்துகிட்டே போய் கூட்டத்தில் விட்டேன். அவர் தொழுது முடித்தும் ரொம்பவே வருத்தப்பட்டார் .பஜர் தொழுகைக்கு முன்னால் இரெண்டு ரக்காத் தொழுகை ரொம்பவும் முக்கியம் .அது இல்லாமல் பஜர் தொழுகையே கிடையாதுன்னு  வாதிட்டார் . ஊரில் அவர் இமாம் இப்படித்தான் சொன்னாராம் .கடமையான பஜர் தொழுகையை விட சுன்னத் தொழுகை முக்கியமாம் .
     இதில் யாரை குறை சொல்வது .இவரது அறியாமையா..? இல்லை வழி கெடுத்த அந்த இமாமா..? படிப்பறிவு இல்லாத பாக்கிஸ்தானி களிடமும் , நமது தமிழர்களிடமும் தான் இது அதிகம் இருப்பது வேதனையின் உட்சக்கட்டம் . இதுப்போலவே  பள்ளிகளின் நட்ட நடுவே நின்று தொழுவது .  தனக்கு முன்னால் ஏதாவது ஒன்று தடுப்பு வைக்காம்ல் தொழுவது கூடாது . அப்படி தொழுபவர் குறுக்கே போவதின் தீங்கு  உங்களுக்கு தெரிந்திருந்தால் 40 வருடம் கூட பொருமையுடன் அங்கேயே நின்றிருப்பீகள் ..இதுவும் ஒரு ஹதீஸ்.
    ஒரு தொழுகையானது நமது எத்தனையோ  தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல்  செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!

11 comments:

  1. Riyas Says:

    Assalamu Alaikkum,,

    very useful post..

    Posted on October 16, 2011 at 7:11 PM  

    குறையொன்றுமில்லை. Says:

    ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!


    எல்லா பிரிவினருக்குமே கூட்டுப்பிரார்த்தனை செய்வது ரொம்ப முக்கியம்தான்.

    Posted on October 16, 2011 at 7:33 PM  

    ஸாதிகா Says:

    சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டியே பள்ளிக்கு செல்வது செல்வது நல்லது.சுன்னத் தொழுகைக்காக நடந்து கொண்டிருக்கும் இமாம்ஜமாத்தை நிராகரிப்பது அறிவீனம். ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!
    ///

    ரொம்ப ரொம்ப முக்கியம்.சகோ நல்லதொரு பதிவு.ஜஸகல்லாஹு கைரன்.

    //

    Posted on October 16, 2011 at 8:53 PM  

    ஜெய்லானி Says:

    @@@Riyas Says:--//

    Assalamu Alaikkum,,

    very useful post..//

    வாங்க ரியாஸ்... அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    Posted on October 16, 2011 at 9:22 PM  

    ஜெய்லானி Says:

    @@@Lakshmi Says:--//எல்லா பிரிவினருக்குமே கூட்டுப்பிரார்த்தனை செய்வது ரொம்ப முக்கியம்தான்.//

    வாங்க லஷ்மியம்மா வாங்க ...!!
    ஒருவர் சாதாரனமா பிரத்திப்பதை விட கூட்டாக பிராத்திப்பதுக்கு ஏகப்பட்ட பலன் இருக்கு . அந்த கூட்டத்தில் ஒருவர் தனக்காக கேட்டாலும் கூட அவரின் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படும் .இதுவும் ஒரு ஹதிஸ் (நபியின் பொன்மொழிகள்)தான் .
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    Posted on October 16, 2011 at 9:26 PM  

    ஜெய்லானி Says:

    @@@ஸாதிகா--//சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டியே பள்ளிக்கு செல்வது செல்வது நல்லது.சுன்னத் தொழுகைக்காக நடந்து கொண்டிருக்கும் இமாம்ஜமாத்தை நிராகரிப்பது அறிவீனம். ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!! //

    வாங்க ஸாதிகாக்கா வாங்க .!! பெரும்பாலும் சுன்னத் தொழுகை தன் வீட்டிலேயே தொழுவதுதான் நல்லது.
    ஒரு முறை ரஸுலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்.நான் சுன்னத் தொழுகையை பள்ளிவாசலிலேயே தொடர்ந்து தொழுதால் மக்கள் இதையும் ஒரு கடமையாகவே ஆக்கிவிடுவார்கள் . இதனால் சிலநேரம் பள்ளியில் தொழுவேன் . சில நேரம் வீட்டிலே தொழுதிடுவேன் .

    ஒரு சுன்னத் தொழுகைக்காக கடமையானதை விடும் நஷ்டம் மிகப்பெரியது :-(

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    Posted on October 16, 2011 at 9:34 PM  

    Asiya Omar Says:

    //ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!//

    ஆமாம் சகோ.நல்ல பகிர்வு..

    Posted on October 16, 2011 at 10:20 PM  

    மாய உலகம் Says:

    பகிர்வுக்கு நன்றி சகோ!

    Posted on October 17, 2011 at 3:24 AM  

    அம்பாளடியாள் Says:

    என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

    Posted on October 25, 2011 at 12:16 AM  

    Jaleela Kamal Says:

    அஸ்ஸலாமு அலைக்கும் தொழுகை பற்றி சிறப்பாக எழுதி இருகீங்க , பள்ளி வாசலில் சென்றது 2 ரக் அத் முன்பு என்க்கு தெரியாது, சமீபத்த்தில் தெரிந்ததில் இருந்து எப்பபோனாலும் தொழுது கொள்வது.

    Posted on November 4, 2011 at 10:52 AM  

    Unknown Says:

    இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    Posted on November 7, 2011 at 2:41 PM  

Post a Comment